Don't Miss!
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விபச்சார வழக்கு: மேலும் 6 மாதம் காப்பகத்தில் தங்க ஸ்வேதா பாசுவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை ஸ்வேதா பாசு மேலும் ஆறு மாதங்கள் வரை காப்பகத்திலேயே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹைதராபாத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி நடிகை ஸ்வேதா பாசுவை கைது செய்தனர் ஆந்திர போலீசார். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி இயக்குனர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
தனக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறினார் ஸ்வேதா பாசு. அவரை ஹைதராபாதில் உள்ள ஒரு மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகையின் தாயார் எர்ரமஞ்சில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'தனது மகள் மேஜர் என்பதால் அவர் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருப்பதா? அல்லது வீட்டுக்கு திரும்புவதா? என முடிவெடுக்கும் உரிமை அவருக்குத்தான் உள்ளது. அவரை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல். எனவே அவரை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு, அந்த நடிகைக்கு இன்னும் 6 மாதங்களுக்கு ஆலோசனையும், மறுவாழ்வும் தேவைப்படுகிறது. எனவே அவர் மேலும் 6 மாதங்களுக்கு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதுபற்றி நடிகையின் தாயார் சார்பில் ஆஜரான வக்கீல் பிரதீப்குமார் கூறும்போது, ‘‘இந்த உத்தரவை எதிர்த்து செசன்சு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அந்த மனு இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்," என்றார்.