Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை சோனம் கபூர் கழட்டி வைத்த ரூ. 5 லட்சம் வைர நெக்லஸ் மாயம்!
மும்பை: இந்தி நடிகை சோனம் கபூர் தனது வைர நெக்லஸைக் காணவில்லை என மும்பைப் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் மும்பை ஜூகு 7-வது சாலையில் உள்ள பங்களா வீட்டில் தனது தாய் சுனிதாவுடன் வசித்து வருகிறார்.
கடந்த 4-ந்தேதி சோனம் கபூர் பாந்திராவில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர், அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய சோனம், தனது அறையில் இருந்த மேஜையில் தான் அணிந்திருந்த வைர நகைகளைக் கழற்றி வைத்துள்ளார்.
அந்த நகைகளை மும்பையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றிடம் ஒப்பந்த அடிப்படையில், நடிகை சோனம் கபூர் வாங்கியிருந்தார். அவர் அணிந்து கொள்வதற்காக நகைக்கடை நிர்வாகம் 6 பெட்டிகளில் பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மறுநாள் காலை சம்பந்தப்பட்ட நகைக்கடை விற்பனை பிரதிநிதிகள் நகைகளை வாங்கிச் செல்வதற்காக சோனம் கபூரின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது நகைகளை எடுத்து கொடுப்பதற்காக நடிகை சோனம் கபூர் மேஜையை திறந்தபோது, அதில் வைர நெக்லஸ் ஒன்று காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சோனம் கபூர், தனது வைர நெக்லஸைக் காணவில்லை என ஜூகு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை சோனம் கபூரின் வீட்டு வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்றைய தினம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் வேலைக்காரர்கள் யாரும் அன்றைய தினம் நடிகை சோனம் கபூரின் அறைக்கு செல்வது போன்ற காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.
இதனால், விருந்து நிகழ்ச்சியில் சோனம்கபூர் தனது நெக்லஸைத் தவற விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, விருந்து நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காணாமல் போன வைர நெக்லஸின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.