Don't Miss!
- News பாஜக இதை எதிர்பார்த்து இருக்காதே! கர்நாடகாவில் வினையாக மாறிய கரும்பு விவசாயி சின்னம்! தள்ளாடிய தாமரை
- Finance பெங்களூரை காப்பாற்ற களமிறங்கிய ஐடி ஊழியர்கள்.. உண்மையிலேயே செம விஷயம் தான்..!
- Lifestyle தோசை மாவு இல்லாத சமயத்தில் 1 கப் அரிசி மாவு இருந்தா.. 10 நிமிடத்தில் மொறுமொறு-ன்னு தோசை சுடலாம்...
- Sports சூப்பர்! சிஎஸ்கேவின் மாஸ் திட்டம்.. ரூ.14 கோடி வீரருக்கு புதிய பொறுப்பு.. இனி அதிரடி தான்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செல்ஃபியை அடுத்து வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவும் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ
மும்பை: நடிகை ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்த குறும்படக் காட்சி சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
தோனி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. கார்த்தி நடித்த ஆல் இன் அழகுராஜா படத்திலும் நடித்திருந்தார். அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தே அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
நிர்வாண செல்ஃபி
அண்மையில் தான் ராதிகா ஆப்தேவின் நிர்வாண செல்ஃபி படங்கள் வாட்ஸ்ஆப்பில் பரவியது. ஆனால் அந்த புகைப்படங்களில் இருப்பது தான் அல்ல என்றும், தன்னைப் போன்று உள்ள யாரோ ஒருவர் என்றும் ராதிகா தெரிவித்திருந்தார்.
வீடியோ
நிர்வாண செல்ஃபியால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு ராதிகா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப்பின் குறும்படத்தில் நடித்துள்ளார். அந்த குறும்படத்தில் அவர் நிர்வாணமாக வரும் காட்சி சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
குறும்படம்
20 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. சர்வதேச மார்க்கெட்டில் மட்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அந்த குறும்படத்தில் இருந்து ஒரு காட்சி கசிந்துள்ளது.
அனுராக் கஷ்யப்
குறும்பட காட்சி கசிந்துள்ளதை பார்த்து இயக்குனர் அனுராக் கஷ்யப் கோபமும், அதிர்ச்சியும் அடைந்தார். உடனே இது குறித்து அவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வீடியோவை கசியவிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவனம்
ராதிகா ஆப்தே தனது ஆடையை தூக்கி மர்ம உறுப்பை காட்டும் வகையில் அந்த காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியை மிகவும் கவனத்துடன் எடுத்தோம். பெண் குழுவை வைத்து தான் அந்த காட்சியை படமாக்கினோம் என்று அனுராக் தெரிவித்துள்ளார்.
ராதிகா
என்ன ராதிகா, இப்படி ஒரு வீடியோ கசிந்துள்ளதே என்று அவரிடம் கேட்டதற்கு, அந்த வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்யும் வரை இது குறித்து நான் எதுவும் கூற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.