Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காட்டு யானை மீது சவாரி செய்த நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி மீது புகார்
பிராணிகள் நலச் சங்க அனுமதி பெறாமல் காட்டு யானை மீது சவாரி செய்ததாக நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி ஆகியோர் மீது புகார் கிளம்பியுள்ளது.
பிரபல மலையாள நடிகைகள் நஸ்ரியா நசீம், ரஞ்சனி ஹரிதாஸ் இருவரும் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்துள்ளனர்.
இதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த செயலாளர் வெங்கடாசலம் என்பவர் திருச்சூரில் உள்ள பிராணிகள் நல வாரியத்திடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், "2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இல்லாமல் யானைகள் மீது சவாரி செய்வது குற்றமாகும். பிராணிகள் நலவாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல் நடிகைகள் இருவரும் சில குழந்தைகளுடன் யானை மீது சவாரி செய்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு துணை போன வனத்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ரஞ்சனி, தெருநாய்கள் நலனுக்காக குரல் கொடுத்தவர். அவர் இப்படியொரு புகாருக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.