Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எல்லாமே காசு பணம் துட்டு மணி மணி: தமன்னா
சென்னை: எல்லாருமே சம்பளத்திற்காகவே வேலை செய்கிறார்கள். எனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறுபவர் யாராவது ஒருவரை காட்டுங்கள்? என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்த தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
படத்தை பார்க்கும் அனைவரும் தமன்னாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிப்பு பற்றி தமன்னா கூறுகையில்,
குத்தாட்டம்
ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது சாதாரண விஷயம் அல்ல. பாட்டும், டான்ஸும் நல்லபடியாக அமைந்ததால் புதுமுக ஹீரோக்களுடன் ஆடினேன். தயாரிப்பாளர்களே அதிக பணம் தருகிறோம் ஆடுங்கள் என்று கேட்டதால் ஆடினேன். இதில் என்ன தவறு.
சம்பளம்
எல்லாருமே சம்பளத்திற்காகவே வேலை செய்கிறார்கள். எனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறுபவர் யாராவது ஒருவரை காட்டுங்கள்?. நான் மட்டுமா ஒரு பாட்டுக்கு ஆடுகிறேன். காஜல், ஸ்ருதி உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்கள்.
ஹீரோயின்கள்
ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற இந்தி நடிகைகளின் கோரிக்கையை நான் வரவேற்கிறேன். ஹீரோயினை விட ஹீரோவுக்கு பல மடங்கு கூடுதல் சம்பளம் அளிக்கும் நிலை மாற வேண்டும்.
தெளிவு
சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை தேடி வரும் படங்களில் எல்லாம் நடித்தேன். தற்போது தெளிவாகிவிட்டேன். அதனால் நல்ல கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.
பாகுபலி
பாகுபலி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அதை ரசிகர்கள் ஏற்பார்களா என்று பயந்தபோது என்னை அனைவரும் பாராட்டினார்கள். அப்போது தான் இனி வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன்.