Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நானும் என்னைப் பற்றிய கிசுகிசுக்களும்... மனம் திறக்கிறார் ப்ரியா ஆனந்த்
சென்னை: அரிமா நம்பி பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த். வை ராஜா வை, இரும்புக் குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என அடுத்தடுத்து இவரது படங்கள் ரிலீசாக உள்ளன.
பட எண்ணிக்கையைப் போலவே இவரைப் பற்றிய கிசுகிசுக்களும் அதிகம். ஒவ்வொரு ப்டத்தில் நடிக்கும் போதும் அப்படத்தின் நாயகனோடி இணைத்துப் பேசப்படுகிறார் ப்ரியா ஆனந்த்.
இந்நிலையில், டைம்பாஸ் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-
கிசுகிசுக்கள் பத்தி...
நிறையப் படங்கள் பண்றேன். அப்போ கிசுகிசு வரத் தானே செய்யும்.
ப்ரெண்ட்லியான ஹீரோ...
நிஜமாச் சொல்றேன். நான்நடிச்ச,நடிக்கிற எல்லா ஹீரோவுமே என்கிட்ட ப்ரெண்ட்லியாத் தான் இருந்தாங்க, இருக்கிறாங்க.
ஈகோ இல்லாதவங்க...
யாருமே ஈகோ பார்க்கலை. உதவியா இருந்தாங்க. நான் அவங்கக்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்.
எனது லட்சியம்...
சினிமாவில் எனது லட்சியமே நிறைய ஹிட் படங்கள் கொடுப்பது தான். ஆனா, அது நம்ம கையில இல்லையே.
வெற்றி, தோல்வி...
கதை கேட்கும்போது பிடிச்சு தான் அந்த படத்தை ஒத்துக்கறோம். ஆனா, அப்புறம் அது எடுக்கப்படும் விதம், வெளியாகும் நேரம் , ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் இதையெல்லாம் வச்சுத் தான் வெற்றி தோல்வி முடிவாகுது.
நம்ம டியூட்டி...
நல்லா நடிச்சுக் கொடுக்கணும். நம்மாலே அது தானே முடியும்.
நடித்ததில் பிடித்தது...
வணக்கம் சென்னை படத்துல இயக்குநர் கிருத்திகா உதயநிதி கொடுத்த ஹீரோயின் கேரக்டர் தான் ரொம்ப பிடிச்சது. அதுக்காக அவங்களுக்கு ஸ்பெஷலா நன்றி சொல்லணும்.
என் கோணத்தில்...
அந்தக் கதையே என் கேரக்டரோட கோணத்தில் தான் சொல்லப்பட்டு இருக்கும். தவிர அனிருத் மியூஸிக், ரிச்சர்டு நாதன் கேமரானு எல்லாமே நல்லா இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.