Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பழசை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் சிம்புவை லவ்வும் ஹன்சிகா?
சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பதாக செய்தி வெளியானது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. படத்தில் ஸ்ரேயா சரண் உள்ளார். இரண்டாவது ஹீரோயினாக ஒரு நடிகையை ஆதிக் தேடி வருகிறார்.
இந்நிலையில் ஹன்சிகா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது.
மீண்டும் ஹன்சிகா
வாலு படத்தில் நடிக்கும்போது காதலில் விழுந்து பிரிந்தவர்கள் சிம்புவும், ஹன்சிகாவும். இந்நிலையில் முன்னாள் காதலர்கள் மீண்டும் ஜோடி சேரப் போவதாக வெளியான தகவலால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியது.
ஆதிக் ரவிச்சந்திரன்
சிம்பு படத்தில் ஹன்சிகாவா?. இது போன்ற தகவல் எங்கிருந்து கிடைக்கிறது என்றே தெரியவில்லை. என் படத்தில் நிச்சயம் ஹன்சிகா இல்லை என்று ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட படப்பிடிப்பு
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நினைத்ததை விட வேகமாக முடிந்துவிட்டது. சிம்பு அருமையாக நடித்துக் கொடுத்துள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் துவங்கும். அதற்கு முன்பு இரண்டாவது ஹீரோயின் தேர்வு செய்யப்படுவார் என்கிறார் ஆதிக்.
சென்னை, துபாய்
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை அல்லது துபாயில் நடக்கும். முதல்கட்ட படப்பிடிப்பு மிகவும் திருப்திகரமாக முடிந்துள்ளது. முதல்கட்டமாக திண்டுக்கல்லில் காட்சிகளை படமாக்கினோம். பல காட்சிகளை செட் போட்டு படமாக்கினோம் என்று ஆதிக் கூறியுள்ளார்.