Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தந்தை கமலுடன் நடிப்பது மிகப்பெரிய கவுரவம்- சுருதிஹாசன்
சென்னை: தந்தை கமலுடன் பணியாற்றுவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று நடிகை சுருதிஹாசன் தெரிவித்திருக்கிறார்.
நடிக்க வந்து 7 வருடங்களுக்குப்பின் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு நடிகை சுருதிக்கு கிடைத்திருக்கிறது.
நிஜத்தைப் போலவே படத்திலும் தந்தை - மகளாக இருவரும் நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் தந்தையுடன் நடிக்கப் போவது குறித்து நடிகை சுருதிஹாசன் "நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் தந்தை கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது
அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக காத்திருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன்.
அப்பாவுடன் இணைந்து நடிப்பது சவாலான விஷயம் தான் ஆனால் கடுமையாக உழைப்பது மட்டும் தான் என்னுடைய வேலை, மற்ற விஷயங்கள் கடவுள் மற்றும் ரசிகர்களின் கையில் தான் உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.