Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
த்ரிஷா - ராணா பிரிவுக்கு நானா காரணம்? - கன்னட நடிகை மறுப்பு
த்ரிஷா - ராணா காதல் முறிவுடன் என்னைத் தொடர்புபடுத்துவது சரியல்ல என்று கன்னட நடிகை ராகிணி கூறியுள்ளார்.
திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் மிக நெருக்கமாக இருந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் திடீரென இருவரும் பிரிந்துவிட்டதாகவும், இந்த காதல் முறிவுக்கு கன்னட நடிகை ராகிணி திவேதிதான் காரணம் என்றும் செய்திகள் பரவின.
ராகிணி திவேதியும் ராணாவலும் நெருக்கமாகப் பழகுவது த்ரிஷாவுக்குபத் தெரிய வந்ததால்தான் இந்த பிரிவு நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
இதனை ராகிணி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தdரிஷாவுக்கும் ராணாவுக்கும் இடையே உள்ள பிரச்சினை அவர்கள் சொந்த விஷயம்.
அதில் என்னை இணைத்து வதந்திகள் பரப்புவது வருத்தமாக இருக்கிறது. ராணாவுக்கும் எனக்கும் காதல் இல்லை. இதுபோன்ற வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. தயவுசெய்து இதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.