twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் மட்டுமா பல ஹீரோயின்கள் விபச்சார தொழிலுக்கு வந்துள்ளனர்: ஸ்வேதா பாசு

    By Siva
    |

    ஹைதராபாத்: தான் மட்டும் அல்ல பல ஹீரோயின்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அண்மையில் விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.

    குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானவர் ஸ்வேதா பாசு. அவர் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான மக்தீ இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றவர். வளர்ந்த பிறகு தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

    ரா ரா படம் மூலம் கோலிவுட் வந்தவர் கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த 31ம் தேதி ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் ஸ்வேதா கையும், களவுமாக சிக்கினார். அவருடன் சில தொழில் அதிபர்களும் சிக்கினர்.

    இந்நிலையில் இது குறித்து ஸ்வேதா கூறுகையில்,

    நிதி நெருக்கடியால் தவித்த என்னை விபச்சாரம் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சிலர் ஆசை காட்டினர். வேறு வழி இல்லாமல் தான் இந்த தொழிலுக்கு வந்தேன். நான் மட்டுமா இப்படி விபச்சாரத்திற்கு வந்தேன். என்னை போன்று பல ஹீரோயின்களும் இந்த தொழிலுக்கு வந்துள்ளனர் என்றார்.

    முன்னதாக விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை புவனேஸ்வரியும் பல நடிகைகளின் பெயரை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Swetha Basu who got arrested in prostitution case told, "I’m not the only one who faced this problem, and there are several other heroines who have gone through this phase.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X