Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மீண்டும் காதலில் விழ த்ரிஷா தயார், ஆனால்...
சென்னை: மீண்டும் காதலில் விழ தான் தயாராக இருப்பதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா பல ஆண்டுகளாக ஹீரோயினாக உள்ளார். மன்மதன் அம்பு படத்தை அடுத்து மீண்டும் கமல்ஹாஸனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் ஆசையும் அவருக்கு உள்ளது.
இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறுகையில்,
ரஜினி
நான் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டேன். ஆனால் இன்னும் ரஜினி சாருடன் மட்டும் நடிக்கவில்லை. அவருடன் சேர்ந்து நடித்தால் தான் என் சினிமா வாழ்க்கை முழுமை பெறும்.
சினிமா
சினிமா உலகில் நீண்ட காலம் நீடிப்பேன் என நினைக்கவில்லை. நடித்து பார்க்கலாமே என்று இளம் பெண்ணாக நடிக்க வந்தேன். நான் நடிக்க வந்ததில் என் குடும்பத்தாருக்கு முதலில் தயக்கம் இருந்தது. எனக்கு சினிமா ஒத்து வராவிட்டால் விலகிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக தாக்குப்பிடித்துவிட்டேன்.
கமல்
கமல் ஹாஸனின் தூங்காவனம் படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். முதல் முறையாக துப்பாக்கி எடுத்துள்ளேன்.
வருண் மணியன்
வருண் மணியனுடனான திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டது பற்றி பலரும் பலவாறு கணிப்பது என்னை பாதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருப்பதால் அது பற்றி நான் பேச விரும்பவில்லை.
காதல்
நான் காதலில் விழ, திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன். அதை நான் சமூகத்திற்காக செய்ய விரும்பவில்லை. என்றைக்கு நான் எனக்கு ஏற்ற ஒருவரை சந்திக்கிறேனோ அன்று நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார் த்ரிஷா.