Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிப்பதை நான் ஏன் நிறுத்த வேண்டும்... இரு புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்! - த்ரிஷா
திருமணமானாலும் நான் நடிப்பதை நிறுத்தப் போவதில்லை. புதிய படங்களில் ஒப்பந்தமாகப் போகிறேன் என்று நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜனவரி 23-ம் தேதி நடக்கிறது. இதனை இன்று அறிவித்துள்ள த்ரிஷா, தான் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று வந்த செய்திகளை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நடிப்பதை நிறுத்தும் எண்ணமே எனக்கு இல்லை. நான் ஏன் நிறுத்த வேண்டும்..? சொல்லப் போனால் இனிமேல் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளப் போகிறேன். இந்த 2015-ல் மட்டும் எனது நான்கு படங்கள் வெளிவரவிருக்கின்றன," என்று கூறியுள்ளார்.
வருண் மணியன் தொழிலதிபர் மட்டுமல்ல.. தயாரிப்பாளரும் கூட. வாயை மூடிப் பேசவும், காவியத் தலைவன் போன்ற படங்களைத் தயாரித்துள்ள அவர், மேலும் இரு புதிய படங்களைத் தயாரித்து வருகிறார். கணவருடன் இணைந்து இந்த தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபடப் போகிறாராம் த்ரிஷா.