Don't Miss!
- News "போர் குற்றம்.." பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்.. பசியால் கொல்லப்படும் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள்!
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லையே: த்ரிஷா
சென்னை: நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எப்பொழுதுமே பேசியது இல்லை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பின் ஆதரவாளரான த்ரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு தளத்தை நாம் தமிழர் கட்சியினர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
த்ரிஷாவை போலீசார் பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் த்ரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் எப்பொழுதுமே ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லை. எனக்கு ஆதரவாக பேசிய நடிகர் சிம்புவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Secondly,I have never spoken against Jallikattu at any given point.Thank u @iam_str for making my stand clear and takin up for me as always
— Trisha Krishnan (@trishtrashers) January 14, 2017
சிம்புவிடம் பீட்டா ஆதரவாளரான த்ரிஷா பற்றி கேட்டதற்கு, த்ரிஷா தெரு நாய்களுக்கு எல்லாம் தன் வீட்டில் இடம் கொடுத்து பராமரிக்கிறார். அதை யாரும் பாராட்டாதபோது இது குறித்து மட்டும் எப்படி கேட்க முடியும் என்றார். த்ரிஷாவும், சிம்புவும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.