Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவில் பணத்தை விட நடிப்பே முக்கியம்- இனியா
சென்னை: பணத்தை விட திறமையான நடிகை என்ற பெயரை வாங்கவே நான் விரும்புகிறேன் என்று நடிகை இனியா தெரிவித்து இருக்கிறார்.
யுத்தம் செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இனியா தொடர்ந்து மவுனகுரு, வாகை சூடவா, அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்து நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார்.
கதாநாயகி மட்டுமின்றி ஒரு பாடல் மற்றும் வில்லி வேடங்களிலும் நடித்து நான் எந்த வேடத்தையும் ஏற்பேன் என்று இயக்குநர்களுக்கு சொல்லாமல் சொல்லிய இனியா தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்பதைவிட நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரை வாங்கவே தான் விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் மலையாள உலகில் பிரபலமாக இருக்கும் இனியா தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.
வைகை எக்ஸ்பிரஸ், கரையோரம் மற்றும் காதல் சொல்ல நேரமில்லை போன்ற படங்களில் நடித்திருக்கும் இனியாவிற்கு தமிழில் ரஜினி, விஜய் மற்றும் அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாம்.