Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சரித்திரம் படைக்க ஆசைப்படும் திரிஷா!
சென்னை: பாகுபலி படம் மற்றும் அதன் வெற்றி உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சத்தமில்லாமல் ஒரு மாற்றம் இந்தியத் திரையுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஆமாம் சரித்திரப் படங்களின் மீது நடிக, நடிகையர் மற்றும் இயக்குனர்களின் கவனம் திரும்பி இருக்கின்றது. தமிழின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான எஸ்.பி.ஜனநாதன் தஞ்சை பெரிய கோயிலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
இதுநாள்வரை கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை த்ரிஷா தற்போது சரித்திரப் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். த்ரிஷாவின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று விசாரித்தால் எல்லாம் பாகுபலியின் தாக்கம் தான் என்கிறார்கள்.
சரித்திரப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, பாகுபலி பார்ப்பதற்கு முன்பிருந்தே எனக்கு இந்த ஆசை உள்ளது. சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும்" என்று த்ரிஷா தனது நீண்டநாள் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராஜமௌலி காரு பாகுபலி 2 படத்துல த்ரிஷாவுக்கும் ஒரு ரோல் கொடுங்க...