Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'5 கோடி சம்பளம் தாங்க'... சிரஞ்சீவிக்கு 'ஷாக்' கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
ஹைதராபாத்: சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க 5 கோடி சம்பளம் கேட்டு, படக்குழுவை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜாக்குலின் 'மர்டர் 2', 'ஹவுஸ்புல் 2', 'கிக்', 'பிரதர்ஸ்' போன்ற பாலிவுட் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
ஜாக்குலின் நடித்து சமீபத்தில் வெளியான 'ஹவுஸ்புல் 3' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக 'டிஷூம்', 'எ பிளையிங் ஜாட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் 150 வது படமாக உருவாகும் 'கத்திலண்டோடு' (கத்தி ரீமேக்) படத்தில் ஜாக்குலினை, சிரஞ்சீவிக்கு ஜோடியாக்க படக்குழு முயற்சித்துள்ளது.
இதற்காக பேச்சுவார்த்தை நடத்த சென்றவர்களிடம் 5 கோடி சம்பளம் தாங்க என்று கேட்டு அவர்களை ஓட்டம் பிடிக்க வைத்திருக்கிறார். தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஜாக்குலின் ஆர்வம் காட்டாதது தான் இதற்குக் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் ஜாக்குலினும் இப்படத்தில் நடிக்க மறுத்ததால் படக்குழு ரொம்பவே அப்செட்டில் இருக்கிறதாம். இருந்தாலும் தந்தைக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க ராம் சரண் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.