Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சொந்தக் குரலில் பேச ரொம்ப நாளா ஆசைப்படும் காஜல்!
சென்னை: நடிகை காஜல் அகர்வால் விரைவில் தனது படத்திற்கு தானே டப்பிங் பேச இருப்பதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தமிழில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். தனுஷ், கார்த்தி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுல் ஒருவராக உள்ளார். தமிழில் அடுத்ததாக இவர், விக்ரம் ஜோடியாக கருடா படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், தனது சொந்தக் குரலிலேயே படங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம். விரைவில் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க இருக்கிறாராம்.
இவருக்கு ஓரளவுக்கு தமிழ் பேசத் தெரியும் என்றாலும், இன்னும் சரளமாக பேச வரவில்லை. தமிழை விட தெலுங்கை சுலபமாகக் கற்றுக் கொண்டதாகக் கூறும் காஜல், எப்படியும் கூடிய சீக்கிரம் சரளமாக தமிழ் பேசக் கற்று தனது படங்களுக்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.