Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சித்து-சமந்தா காதல் முறிவுக்கு பின்னால் கன்னட நடிகை?
சென்னை: சித்தார்த்தும், சமந்தாவும் பிரிய கன்னட நடிகையான தீபா சன்னதி காரணம் என்று கூறப்படுகிறது.
சித்தார்த்தும், சமந்தாவும் தங்கள் காதலை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கடந்த 2 ஆண்டுகளாக ஜோடி போட்டு பல இடங்களுக்கு சென்றனர். ஜாடை மாடையாக காதல் பற்றி பேசிய அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களின் காதல் முறிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டனர்.
சமந்தா அண்மை காலமாக படங்களிலும், நிஜத்திலும் ஓவர் கவர்ச்சி காட்டுவது சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கு வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது.
சித்தார்த் நடித்துள்ள எனக்குள் ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபா சன்னதி நடித்துள்ளார். இந்த படத்தில் நடிக்கையில் சித்தார்த், தீபா இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகிவிட்டதாம். அதனால் தான் சித்தார்த்-சமந்தாவுடனான காதல் முறிந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சித்தார்த்-சமந்தா பிரிந்தபோதிலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் குறை கூறாமல் தங்களின் வேலையை கவனித்து வருகிறார்கள்.