Don't Miss!
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கல்யாணம் செய்து கொள்ள நடிகை கத்ரீனா என்ன இப்படி ஒரு கன்டிஷன் போட்டிருக்கார்?
மும்பை: தேசிய விருது வாங்கிய பிறகே திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகை கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் காதலை ஒப்புக் கொண்டாலும் திருமணம் பற்றி மட்டும் பேசுவது இல்லை. அப்படியே திருமணம் பற்றி யாராவது கேட்டால் சிரித்துப் பேசி மழுப்பிவிடுகின்றனர்.
இந்நிலையில் தான் கத்ரீனா ஒரு அதிர்ச்சியளிக்கும் விஷயத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய விருது
நான் தேசிய விருது பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்வேன். எனக்கு விருது கிடைக்காவிட்டாலும் நான் நடித்த படத்திற்காவது தேசிய விருது கிடைக்க வேண்டும்.
திருமணம்
தேசிய விருது கிடைக்கும் வரை திருமணம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை. விருது கனவு நிறைவேறிய பிறகே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவேன் என்றார் கத்ரீனா.
விருதா?
கத்ரீனா கைஃப் 2003ம் ஆண்டில் இருந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டாலும் அவருக்கு இன்னும் சரியாக நடிக்கத் தெரியவில்லை என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
பொறாமை
தமாஷா படத்தில் ரன்பிர் கபூர் தனது முன்னாள் காதலி தீபிகா படுகோனேவுடன் நடித்துள்ளார். அந்த படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பர் என பலரும் கூறியதை கேட்டு கத்ரீனா கோபம் அடைந்தார். என்ன பெரிய கெமிஸ்ட்ரி என்று குமுறினார்.