Don't Miss!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
கத்துக்க எளிதான மொழி தமிழ்தான்!- 'தமிழச்சி' தமன்னா புகழாரம்
சென்னை: இருக்கும் மொழிகளிலேயே கற்றுக் கொள்ள எளிமையானது தமிழ்தான் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
தனது 16 வயதில் தமிழ் தெரியாமல் கேடி படத்தில் அறிமுகமானவர் தமன்னா. இப்போதோ சொந்தக் குரலில் டப்பிங் பேசும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு மேல் நடித்தும் இன்னும் சொந்தக் குரலில் தமிழ்ப் பேசத் தெரியாத நடிகைகளுக்கு மத்தியில் தமன்னாவின் தமிழ்ப் பற்று வியக்க வைத்துள்ளது.
ஈடுபாடு
இதுகுறித்து தமன்னா இப்படிக் கூறுகிறார்:
எது செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் இது நடந்தது. நான் தமிழ் பேசுவதை கண்டு பலர் ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்கள். பரவசத்துடன் பார்த்தவர்களும் உண்டு.
பயிற்சி
தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் போது, நிச்சயம் ஒரு நாள் தமிழில் பேச வேண்டும் என எண்ணினேன். அதற்கான பயிற்சிகளை தினம் தினம் எடுத்து வந்தேன். அதனால்தான் இந்தளவுக்கு என்னால் பேச முடிகிறது.
எளிய மொழி தமிழ்
என்னைப் பொருத்தவரை எளிதில் கற்றுக் கொள்ள கூடிய மொழி தமிழ்தான். இது நான் உணர்ந்தது. மற்றவர்களும் உணர்ந்தால் தமிழில் பேசலாம்.
கைவந்த கலை
இப்போது மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என தென்னகத்து மொழிகளில் பேசுவது எனக்கு கை வந்த கலை.
முழுமை
கிளாமர், நடனம் என்று மட்டுமே ஆடுவது ஹீரோயினின் வேலையாக இருக்க முடியாது. டப்பிங் பேசினால் அதில் ஒரு பூரணம் கிடைக்கும். அதனால்தான் இந்த முயற்சி".
ஆஹா.. கேட்கவே சிலிர்க்கிறது தமன்னா!