Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'அந்த 2 மணிநேர நரகம்': முதல்முறையாக மனம் திறந்து பேசிய நடிகை
திருவனந்தபுரம்: என்னை கடத்திய சம்பவம் பணத்திற்காக நடந்தது போன்று இல்லை. இதற்கு பின்னால் சதி உள்ளது என்று பிரபல மலையாள நடிகை தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது தனது முன்னாள் கார் டிரைவரால் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து அவர் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
துணிச்சல்
சினிமா நட்சத்திரங்களை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்லும் டிரைவருக்கு எப்படி கடத்தும் அளவுக்கு துணிச்சல் வந்தது? யார், எதற்காக, ஏன்? இந்த கேள்விகளுக்கு பதிலே கிடைக்கவில்லை.
சதி
சினிமா துறையில் உள்ள என் எதிரிகள் தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கிறார்கள் என்று நான் கூற மாட்டேன். இது பணத்திற்காக நடந்தது போன்று இல்லை. இதற்கு பின்னால் சதி உள்ளது.
போராடுவேன்
எனக்கு பல கேள்விகள் உள்ளன. அதற்கு சரியான பதில் தேவை. நான் ஜெயிக்கும் வரை போராடுவேன். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை.
எதிரிகள்
எனக்கு சினிமா துறையில் நிரந்தர நண்பர்களும் உண்டு, எதிரிகளும் உண்டு. நான் செய்யாத தவறுக்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்டது இல்லை. இது எனக்கு நடந்தால் யாருக்கும் வேண்டுமானாலும் நடக்கலாம். இது குறித்து என்னால் வெளியே பேச முடிந்தது என்றால், அனைவராலும் முடியும்.
அமைதி
எனக்கு நடந்தது போன்ற சம்பவம் நடந்தால் தயவு செய்து அதை மூடி மறைக்காதீர்கள். குற்றவாளிகள் தப்ப நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? பெண்கள் அல்ல குற்றம் செய்தவர்கள் தான் வலியை அனுபவிக்க வேண்டும்.
சம்பவம்
இந்த சம்பவத்தை நான் மூடி மறைக்க நினைத்திருந்தால் இது குறித்து ஒரு 10 பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நான் வாழ்நாள் முழுவதும் வேதனையுடன் வாழ்ந்திருப்பேன்.