Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
என்ன அவரா அப்படி? ... அலறடிக்கும் "ஆட்டோகிராப்" மல்லிகா!
சென்னை: இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள நடிகை மல்லிகா அவரது படத்தில் நடிகைகள் நடிக்கத் தயங்கும் துணை நடிகை கேரக்டரில் துணிச்சலாக நடித்து வருகின்றார்.
ஆட்டோகிராப் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மல்லிகா, அதன்பின்னர் பல படங்களில் தங்கை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் இயக்குனராக மாறியுள்ளார்.
"பழனியிலே கனகம்" என்ற மலையாளப் படத்தில் இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கும் மல்லிகா, இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். நடிகை பாவனா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் மல்லிகா துணை நடிகையாக நடித்துள்ளார்.
சினிமா உலகில் நடிகைகளும், துணை நடிகைகளும் படக்குழுவினர்களால் என்னென்ன தொந்தரவுகள் அனுபவிக்கின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக படமாக்கியிருப்பதாக கூறியுள்ளார் மல்லிகா.
மேலும், இந்த படத்தின் துணை நடிகை வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகள் யாரும் சம்மதிக்காததால், துணிச்சலாக நானே இந்த கேரக்டரில் நடிக்க முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த படம் நடிகைகளின் மறுபக்கத்தை அப்பட்டமாக வெளிக்கொண்டு வரவிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.