Don't Miss!
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெரியலேன்னா எதுக்கு தப்புத் தப்பா எழுதறீங்க?- கோபத்தில் அஞ்சலி
'பிரபலங்கள் என்றாலே அவர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் அதிகம் வருவது வழக்கமாகிவிட்டது...'
- வெளியிலிருக்கும் யாரும் இப்படிச் சொல்லி எளிதில் அதைக் கடந்து போய்விடலாம். ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் நிலைமை?
அப்படி ஒரு சங்கடத்தை அடிக்கடி சந்திக்கிறார் நடிகை அஞ்சலி. முடிந்தவரை தன்னைப் பற்றி எதையுமே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அவரைப் பற்றி தாறு மாறாத செய்திகள் வருவதால் பெரும் கோபமும் நிம்மதியின்மையும் ஏற்பட்டுள்ளதாம் அவருக்கு.
அஞ்சலிக்கு அமெரிக்காவில் காதலர் இருக்கிறார் என்று சிலரும், அஞ்சலிக்கு உடல்நலமில்லை, எனவே படங்களில் நடிப்பதைத் தவிர்க்கிறார் என்று சிலரும், அஞ்சலி நாள் கணக்கில் சம்பளம் கேட்கிறார் என்று சிலரும் அடித்துவிட... இதனால் அஞ்சலிக்கு தொழில்ரீதியாக பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து சமீபத்தில் தனது நலம் விரும்பிகளிடம், "என்னைப் பற்றி எந்த விஷயமும் தெரியாமலேயே இஷ்டத்துக்கும் சிலர் எழுதுவது வேதனையாக உள்ளது.
இவர்கள் எழுதும் எதுவுமே உண்மை கிடையாது. என்னிடம் விசாரிக்காமல் எதையும் தயவு செய்து வெளியிட வேண்டாம். அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறேன். எனக்குப் பிரச்சினை என்ற போது கைகொடுத்ததும் மீடியாதான். அந்த மரியாதையை தொடர விரும்புகிறேன்," என்று கூறி வருந்தியுள்ளார்.
இதனால் சகலமானவர்களுக்கும்....