Don't Miss!
- Sports பக்கத்தில் வந்து தோற்றுவிட்டோம்! இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டது..பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கருத்து
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஃபேஸ்புக்காம், ஃபேஸ்புக்கு: தடை விதிக்கக் கோரினால் நான் ஆதரிப்பேன்- நடிகை பூர்ணா
சென்னை: மலையாள திரையுலகம் தன்னை பலமுறை ஏமாற்றிவிட்டதாக நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த பூர்ணா மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழ் திரையுலகிற்கு வந்தார். பார்க்க அழகாக இருந்தாலும் பூர்ணாவால் கோலிவுட்டில் ஜொலிக்க முடியவில்லை.
இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பூர்ணா கூறுகையில்,
மலையாளம்
நான் முதலில் மலையாள திரையுலகில் தான் நடிகையாக அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு படங்கள் போன்று மலையாளத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைப்பது இல்லை.
ஏமாற்றிவிட்டார்கள்
மலையாளத்தில் நல்ல கதாபாத்திரம் என்று கூறி சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிடுவார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் மீறக் கூடாதே என்று நானும் நடிப்பேன். இப்படி தான் மலையாள திரையுலகம் என்னை பலமுறை ஏமாற்றிவிட்டது.
வதந்தி
நான் தெலுங்கு படம் ஒன்றில் பேயாக நடித்தேன். அந்த படத்தை பார்த்து ஒருவர் அதிர்ச்சியில் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவியது.
கர்ப்பம்
நான் ஒரு படத்தில் கர்ப்பிணியாக நடித்ததை பார்த்து நான் நிஜமாகவே கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. பொய்யான தகவல்களை பரப்பும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தால் அதை நான் ஆதரிப்பேன்.
திருமணம்
இந்த ஆண்டே எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என் குடும்பத்தார் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்னையும், என் குடும்பத்தாரையும் நேசிக்கும் ஒருவரே எனக்கு கணவராக வர வேண்டும்.