Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சின்னத் திரை நடிகர்கள் சங்கத் தலைவராக நளினி தேர்வு
சின்னத் திரை நடிகர்கள் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு செய்யப்பட்டார்.
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகை நளினி, நடிகர்கள் ராஜேந்திரன், சிவசீனிவாசன் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்டன.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக திரைப்பட வசனகர்த்தா லியாஸ் அலிகான் செயல்பட்டார். மொத்தமுள்ள 1,300 வாக்குகளில் 700-க்கும் அதிகான வாக்குகள் பதிவாகின.
மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 சுற்றுகள் கொண்ட வாக்குப் எண்ணிக்கையின் தொடக்கம் முதலே நடிகை நளினி முன்னிலையில் இருந்தார். இறுதியில் 273 வாக்குள் பெற்று நடிகை நளினி வெற்றி பெற்றார்.
துணைத் தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று திங்கள்கிழமை (அக். 13) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.