Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மனஅழுத்தம், பென்னே மசாலா தோசை: ஐஐஎம் மாணவர்களை கவர்ந்த தீபிகா படுகோனே
பெங்களூர்: ஐஐஎம் பெங்களூர் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் பற்றி பேசினார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.
பெங்களூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நடந்த வியாபாரம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார்.
சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தீபிகா மாணவ, மாணவியரிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
தாத்தா வீடு
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் என் தாத்தா வீட்டிற்கு சென்ற நினைவு வருகிறது. சிடிஆரில் தான் சுவையான பென்னே மசாலா தோசை கிடைக்கும். அதை சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
மனஅழுத்தம்
நான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். ஆனால் உரிய உதவி பெற்று மனஅழுத்தத்தில் இருந்து விடுபெற்றேன். தற்போது நான் நலமாக உள்ளேன். இதை ஏன் கூறுகிறேன் என்றால் மனஅழுத்தத்திற்கு விடிவு உண்டு.
அரசியல்
மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்ச வேண்டாம். அதில் இருந்து வெளியே வர முடியும். நான் அரசியல் விவகாரங்கள் பற்றி பேசுவது இல்லை. எதை பற்றி பேசினால் உதவியாக இருக்குமோ அதை பற்றி மட்டுமே பேசுகிறேன்.
அனுபவம்
என் வாழ்வில் நிறைய பார்த்துள்ளேன். என் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இருட்டின் முடிவில் வெளிச்சம் உள்ளது என்பதை பாருங்கள். மனஅழுத்தம் ஏற்பட்டால் தக்க உதவி பெற்று குணமடையுங்கள்.