Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாவாடை, தாவணியா? ம்க்கும்..: கடுப்பாகும் நந்திதா
சென்னை: இனி கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை என நந்திதா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் மாடர்னாக வளர்ந்தவர் நந்திதா. அங்கு ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து சுற்றியவரை தமிழ் திரையுலகம் பக்கா கிராமத்து பெண்ணாக மாற்றிவிட்டது. அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட் வந்தவரை பாவாடை, தாவணி அணிய வைத்து கிராமத்து பெண்ணாக்கிவிட்டார்கள்.
நான் மாடர்ன் பொண்ணு, மாடர்ன் பொண்ணு என்று மைக் வைக்காத குறையாக அவர் கூறுவது யார் காதிலும் விழவில்லை.
போதும்
பாவாடை, தாவணியில் நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளார் நந்திதா.
பிரபலம் இல்லை
தான் நடித்த படங்கள் ஹிட்டானபோதிலும், தனது கதாபாத்திரங்கள் வெயிட்டானதாகவும் இருந்தும் தனக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தோ, அதிக சம்பளமோ கிடைக்கவில்லை என்று நந்திதா கவலைப்படுகிறாராம்.
ஹிட்
லக்ஷ்மி மேனன் ஹிட் படங்கள் கொடுக்கும் நாயகி என்று பிறர் கூறுகையில் நானும் ஹிட் நாயகி தானுங்கோ என்று கூவிய நந்திதாவின் பேச்சு யார் காதிலும் விழவில்லை.
வெறுப்பு
தன்னிடம் யாராவது கிராமத்து கதை கூறினால் நந்திதா கடுப்பாகிவிடுகிறாராம். ஏதாவது மாடர்ன் ரோல் இருந்தால் கொடுங்களேன் என்கிறாராம்.