Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நயன்தாரா கையில் பச்சைக் குத்திய பிரபு தேவா பெயரை அழிக்க ஆபரேஷன்
தன் முன்னாள் காதலன் பிரபு தேவா பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் நயன்தாரா, அதனை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளப் போகிறாராம்.
பிரபு தேவாவைக் காதலித்த போது, அவர் மீதான அன்பைக் காட்ட, அவர் பெயரை இடது கையில் 'பிரபு' என்று பச்சை குத்திக் கொண்டார்.
எல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில் அந்தப் பெயரை பச்சை குத்தியிருந்தார்.
அவர் நடித்த சில படங்களிலும், பொது இடங்களிலும் அந்த 'பச்சை'யை பச்சையாகப் பார்க்க முடிந்தது.
தடாலென ஒரு நாள் இருவருக்கும் காதல் முறிந்தது. இப்போது மீண்டும் படங்களில் படு பிசியாக இருக்கும் நயன்தாராவுக்கு, பிரபு என்ற அந்தப் பச்சை பெரும் இம்சையாக இருக்கிறதாம்.
இயக்குநர்கள் தயங்கித் தயங்கி, மேடம் அந்த பச்சையைக் கொஞ்சம் மறைச்சா நல்லது என்று சொல்கிறார்களாம். ஆரம்பத்தில் இந்தப் பச்சையை பக்கா மேக்கப் மூலம் மறைத்து வந்தவர், இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்துவிட்டார்.
லேசர் சிகிச்சை மூலம் அந்தப் பச்சையை அகற்ற மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். சூர்யா படம் தொடங்கும்போது, நயன்தாரா கையிலிருந்து பிரபு பச்சை காணாமல் போயிருக்குமாம்!