Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கோயிலெல்லாம் வேணாங்க.. அது என் நிம்மதியைக் கெடுக்கும்! - நயன்தாரா
தமிழ் ரசிகர்கள் தரும் அன்பே போதும்.. எனக்காக யாரும் கோயிலெல்லாம் கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.
நடிகைகளுக்கு கோயில் கட்டி, உலகையே வியக்க வைத்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.
குஷ்பு
அப்படி ஒரு பாக்கியத்தை முதலில் பெற்றவர் குஷ்பு. அந்தக் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பூசாரியை வைத்து பூஜை அர்ச்சனை வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
அடுத்து நக்மா, நமீதா
அடுத்து நக்மாவுக்கும் கோவில் கட்டினர். பாட்ஷா வெளியாகி, நக்மா பெரிய ரேஞ்சில் இருந்த நேரம் அது.அது நமீதாவுக்கும் கோயில் கட்டுவதாக செய்தி வெளியானது.
நயன்தாரா
இப்போது நயன்தாராவுக்கு கோவில் கட்ட தற்போது ஏற்பாடுகள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்கள் இணைந்து இக்கோவிலை கட்டப் போகிறார்களாம். தோதான இடத்தை தேர்வு செய்யும் முயற்சியில் உள்ளனர்.
அனுமதி மறுப்பு
கோவில் கட்டுவதற்கு நயன்தாரா விடமும், அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் நயன்தாரா இதற்கு சம்மதிக்கவில்லை. கோவில் கட்ட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்பு போதும்...
அவர் கூறுகையில், "ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனக்குப் போதுமானது. இதற்கு மேல் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.
அமைதியைக் கெடுக்கும்
எனக்கு கோவில் கட்டும் செயலில் ஈடுபடாதீர்கள் என் வேண்டுகோளையும் மீறி கோவில் கட்டினால், அது மன அமைதியைக் கெடுப்பதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.