Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசிய நயன்தாரா!!
பத்தாண்டுகளுக்கு மேல் முதல் நிலை நாயகியாகத் திகழும் நயன்தாரா இதுவரை தமிழ்ப் படங்களில் சொந்தக் குரலில் பேசி நடித்ததில்லை. அந்தக் குறையை நானும் ரவுடிதான் படத்தில் போக்கிவிட்டார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள படம் - 'நானும் ரெளடிதான்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில்தான் நயன்தாரா சொந்தக் குரலில் பேசியுள்ளார்.
இதுவரை தமிழில் பல படங்கள் நடித்துள்ள நயன்தாரா எந்தவொரு படத்துக்கும் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தியதில்லை. ஆனால் முதல்முறையாக நானும் ரெளடி தான் படத்துக்குச் சொந்தக் குரலில் பேசியுள்ளார். அவர் இந்தப் படத்துக்கும் டப்பிங் குரலைப் பயன்படுத்தவே விரும்பினார். ஆனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் வற்புறுத்திக் கேட்டதால் சொந்தக் குரலில் டப் செய்தாராம்.
சமீபத்தில் வெளியாகியுள்ள நானும் ரவுடிதான் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது நயன்தாராவின் சொந்தக் குரல்தான்!