Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேட்ட சம்பளம் ஓகே.... சிரஞ்சீவிக்கு ஜோடியானார் நயன்தாரா!!
கேட்ட சம்பளத்தைத் தர ஒப்புக் கொண்டதால் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் நம்பர் ஒன் நடிகராகத் திகழ்ந்தவர் சிரஞ்சீவி. மெகா ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவர், திடுதிப்பென்று கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்தார்.
பின்னர் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸில் ஐக்கியமாகி, மத்திய அமைச்சர் பதவியையும் அனுபவித்தார். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவ, இப்போது சிரஞ்சீவிக்கு இரண்டும் கெட்டான் நிலை. அரசியலும் இல்லை... சினிமாவும் இல்லை.
இப்படியே இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்தாரோ என்னமோ... மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
இப்போது அவர் நடிக்கும் படம் 150வது படமாகும். வி.வி.விநாயக் இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சிரஞ்சீவி மகன் ராம்சரண் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
விழாக்களில் பங்கேற்க மறுக்கிறார் என்று கூறி நயன்தாராவுக்கு தெலுங்கில் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தடையும் நீங்கியுள்ளதாலும், சிரஞ்சீவி படத்துக்காக கேட்ட சம்பளத்தைத் தர தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டதாலும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் நடிக்கிறார் நயன்தாரா.