twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் - த்ரிஷா

    By Shankar
    |

    திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

    12 ஆண்டுகள் கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

    அஜீத் ஜோடியாக நடித்த ‘என்னை அறிந்தால்' படம் வருகிற 29-ந்தேதி ரிலீசாகிறது. ஜெயம் ரவி, ஜோடியாக நடித்த ‘பூலோகம்' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘அப்பா டக்கர்' என்ற படத்திலும் நடிக்கிறார்.

    No cinema after marriage, says Trisha

    இந்த நிலையில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.

    வருண் மணியன் ‘வாயை மூடி பேசவும்', ‘காவியத் தலைவன்' போன்ற படங்களை தயாரித்து உள்ளார். த்ரிஷாவும் வருண் மணியனும், சமீபத்தில் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர். இருவருக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.

    த்ரிஷா தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறும் போது, திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை. ஆனாலும் சினிமாவை விட்டு விலகி செல்லமாட்டேன். சினிமா தொடர்பில்தான் இருப்பேன் என்றார்.

    English summary
    Trisha says that she would never act in cinema after marriage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X