Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் - த்ரிஷா
திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
12 ஆண்டுகள் கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
அஜீத் ஜோடியாக நடித்த ‘என்னை அறிந்தால்' படம் வருகிற 29-ந்தேதி ரிலீசாகிறது. ஜெயம் ரவி, ஜோடியாக நடித்த ‘பூலோகம்' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘அப்பா டக்கர்' என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
வருண் மணியன் ‘வாயை மூடி பேசவும்', ‘காவியத் தலைவன்' போன்ற படங்களை தயாரித்து உள்ளார். த்ரிஷாவும் வருண் மணியனும், சமீபத்தில் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர். இருவருக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.
த்ரிஷா தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறும் போது, திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை. ஆனாலும் சினிமாவை விட்டு விலகி செல்லமாட்டேன். சினிமா தொடர்பில்தான் இருப்பேன் என்றார்.