Don't Miss!
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமலை பிரிவதை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை: கவுதமி
சென்னை: 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பிறகு நடிகை கவுதமி கமல் ஹாஸனை பிரிவதை தன்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த கமல் ஹாஸன், கவுதமி நிஜ வாழ்க்கையிலும் சேர்ந்து வாழ்ந்தனர். கமல் தனது மனைவி சரிகாவை பிரிந்த பிறகு கவுதமியுடன் வாழ்ந்தார்.
இருவரும் திருமணம் செய்யாமல் 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
பிரிவு
13 ஆண்டு கால உறவை இன்றுடன் முறித்துக் கொள்வதாக நடிகை கவுதமி ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். தான் முதலில் ஒரு தாய் அதன் பிறகே மற்ற உறவுகள் என அவர் தெரிவித்துள்ளார்.
கஷ்டம்
கமல் ஹாஸனை பிரிவது மிகவும் கஷ்டமாகவும், வேதனையாகவும் உள்ளது. ஆனால் சில நேரங்களில் சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு தான் சொல்ல முடியும் என கவுதமி பிரபல செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள்
ரசிகர்கள் இந்த பிரிவை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று அந்த தொலைக்காட்சி கேட்டதற்கு கவுதமி கூறுகையில், பிரிவை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கமலை பிரிந்ததற்கான காரணத்தை கூற விரும்பவில்லை என்றார்.
ஸ்ருதி
கமலின் மகள்கள் ஸ்ருதி ஹாஸன், அக்ஷரா ஆகியோர் அருமையாக வளர்ந்துவிட்டனர். அவர்கள் இருவருக்கும் நல்ல தோழியாக இருக்க விரும்பினேன் என கவுதமி தெரிவித்துள்ளார்.