Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆபாசப் படம் வெளியிட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்ய தமன்னா முடிவு!
தன்னை ஆபாசமாக சித்தரித்து இணைய தளத்தில் படம் வெளியிட்டவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார் நடிகை தமன்னா.
தமன்னாவின் ஆபாச படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியானது. இதுபற்றி தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர், அந்த படம் போலியானது, நிர்வாண பெண்ணின் உடலோடு எனது தலையை ஒட்டி வெளியிட்டு உள்ளனர் என்று விளக்கமளித்தார்.
கோபம்
இந்த படத்தை வெளியிட்டவர்கள் முட்டாள்கள்.. தங்களுக்கும் அக்காள், தங்கை இருக்கின்றனர் என்பதை உணராத புல்லுருவிகள் என்று ஆவேசமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் அமைதி
இந்த விவகாரத்தை போலீஸ் வரை கொண்டு போய் சர்ச்சையாக்க வேண்டாம்.. தனக்குத்தான் அவமானம் என்று நினைத்து முதலில் அமைதியாக இருந்தார் தமன்னா.
வேகமாகப் பரவியது
ஆனால் இந்த ஆபாச படங்கள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். சிலர் தமன்னாவின் நிஜமான ஆபாச படம் என்றே நம்புகின்றனர்.
போலீசில் புகார்
எனவே படங்களை வெளியிட்டவர்கள் மீதும், இந்தப் படங்களை இணையத்திலிருந்து நீக்குமாறும் போலீசில் புகார் அளிக்கும்படி தமன்னாவிடம் நண்பர்களும் உறவினர்களும் வற்புறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து ஹைதராபாத் போலீசாரிடம் தமன்னா இன்று புகார் அளிக்கிறார்.