twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாஸ்க் போட்டு ட்விட்டரில் பீதியைக் கிளப்பிய 'அப்பாடக்கர்' த்ரிஷா

    By Siva
    |

    சென்னை: த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பீதியடைந்துவிட்டனர்.

    தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களை பன்றிக் காய்ச்சல் மிரட்டி வருகிறது. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் பன்றிக் காய்ச்சல் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தான் த்ரிஷா பீதியை கிளப்பியுள்ளார்.

    பீதி

    பீதி

    நடிகை த்ரிஷா ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய்விட்டனர்.

    மாஸ்க்

    மாஸ்க்

    த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் மாஸ்க் அணிந்தபடி இயக்குனர் சுராஜுடன் இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிந்துள்ளதாக அப்பாடக்கர் படத்தில் நடித்து வரும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.

    ஒன்றும் இல்லை

    ஒன்றும் இல்லை

    த்ரிஷா மாஸ்க் போட்டிருந்ததை பார்த்துவிட்டு அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏதாவது வந்துவிட்டதோ என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர். இது குறித்து அறிந்த த்ரிஷா தனக்கு ஒன்றும் இல்லை, நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    English summary
    Trisha's fans got shocked after seeing her in mask, thinking that she might have got flu. Later the actress cleared the air saying she is doing just fine.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X