Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா... தடியடி நடத்தி மீட்ட போலீஸ்... ஹைதராபாத்தில் பரபரப்பு!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்குச் சென்ற நடிகை சமந்தா, எதிர்பாராதவிதமாக ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர், ரசிகர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் அவரைப் பத்திரமாக மீட்டனர்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார் நடிகை சமந்தா.இவர் தமிழில் தற்போது விக்ரம் ஜோடியாக 10 எண்றதுக்குள்ள, சூர்யா ஜோடியாக 24 மற்றும் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார் சமந்தா. நகைக்கடை திறப்பு விழாவில் சமந்தா கலந்து கொள்ளும் தகவல் அறிந்து முன்கூட்டியே ரசிகர்கள் நகைக்கடையைச் சுற்றி திரண்டிருந்தனர். எனவே, பாதுகாப்புக்காக போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.
ஆனால், காரில் இருந்து இறங்கிய சமந்தாவைப் பார்க்க முண்டியடித்த ரசிகர்கள் தடுப்பை மீறி வந்து, சமந்தாவிடம் கைகுலுக்க முயற்சித்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சிக்கினார் சமந்தா.
இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி சமந்தாவை மீட்டு அழைத்து சென்றனர்.
கூட்டத்திலிருந்து வெளியே வந்த சமந்தா, ரசிகர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே கை அசைத்தார். பின்னர் நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சமந்தா, அங்கிருந்த விதவிதமான நகைகளை எடுத்து தனது கழுத்தில் அணிந்து அழகு பார்த்தார்.