Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை!
ரஜினியுடன் நடிக்க வேண்டும்.. - இந்திய சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் சொல்வது இந்த வாக்கியத்தைத்தான்.
அப்படிப்பட்ட ரஜினியுடன் நடிக்க ஒரு நடிகை மறுத்துவிட்டார். அவர் வைஜெயந்தி மாலா.
மூத்த கலைஞர்களை மதிப்பதில் ரஜினிக்கு நிகரில்லை. அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அவர்களை தனது படங்களில் இடம்பெற வைப்பார் ரஜினி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நான் வாழவைப்பேன், ஜஸ்டிஸ் கோபிநாத் போன்ற படங்களில் நடித்தவர், தான் சூப்பர் ஸ்டார் ஆன பிறகு அதே சிவாஜியை விடுதலை, படிக்காதவன், படையப்பா போன்ற படங்களில் கவுரவமான வேடங்களில் நடிக்க வைத்தார்.
ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், வடிவுக்கரசு, மனோரமா, பண்டரிபாய், விகே ராமசாமி, அசோகரன், சாவித்திரி, விஜயகுமாரி, கே ஆர் விஜயா, முத்துராமன், ஜெமினி கணேசன் என பல மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இப்படி பலருடன் நடித்து வந்த ரஜினி, தனது ஒரு படத்தில் நடிகை வைஜயந்தி மாலா நடிக்க வேண்டும் என விரும்பினார். மும்பையில் வெளியான ஒரு பத்திரிகையில் கண்ணாடி அணிந்து மிகவும் அலட்சியமாக வைஜெயந்திமாலா திரும்பி பார்க்கும் ஒரு புகைப்படத்தைக் கண்டார் ரஜினி.
நண்பர் சிரஞ்சீவியிடம் அந்த புகைப்படத்தை காட்டி, "ஒரு போட்டோவிலேயே அந்த கேரக்டரைக் காட்டுகிறார் பாருங்க.. நம்ம அடுத்த படத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும். அதற்கேற்ப ஆக்டிங் ஸ்கோப் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்," என்றாராம் ரஜினி.
உடனே அதற்கான கதை விவாதம் முடிந்து, ரஜினிக்கு இணையாக ஒரு வேடமாக அமைத்தனர். படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்க முடிவானது.
வைஜயந்தி மாலாவிடம் தங்களுடன் ரஜினி நடிக்க விரும்புவதாக சொல்லப்பட்டது. அதன்பின் அவரிடம் அப்படத்தின் கதையையும், அவருடைய கதாபாத்திரத்தையும் சொல்லப்பட்டது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பணமா பாசமா படத்தில் ஜெமினி, எஸ்.வரலட்சுமி மாப்பிள்ளை, மாமியாராக நடித்தது போல் அமைய வேண்டும் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் வைஜயத்ந்தி மாலா அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் சிரஞ்சீவி நேரில் வந்து கேட்டார். ரஜினியும் அவரிடம் வந்து பேசினார். ஆனால் வைஜயந்தி மாலா தன் முடிவிலிருந்து மாறவில்லை.
"ரஜினி இன்று இளைஞர்களின் மாபெரும் சக்தியாக விளங்கி வருகிறார். அவருடன் மோதுவது போன்ற கதாபாத்திரத்தில் நான் ஒரு போதும் நடிக்க மாட்டேன்," என்று சொல்லி விட்டார் வைஜயந்திமாலா.
இதனால் அந்த வாய்ப்பு முன்பு ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீவித்யாவுக்குப் போனது. மாமியாராக ஸ்ரீவித்யா ஒப்பந்தமானார்.
ஸ்ரீவித்யா சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். படமும் வெள்ளி விழா கண்டது. அந்தப் படம்தான் மாப்பிள்ளை.