Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
களை கட்டும் ஆஸ்கர் விருதுகள்.. விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா தேர்வு
மும்பை: இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு இந்த வருடம் நடைபெறப் போகும் 88 வது ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பாலிவுட்டின் தலை சிறந்த நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான குவாண்டிகோவில் நடித்து வருகிறார்.
இதில் நடித்ததற்காக அமெரிக்கர்களின் மனங்கவர்ந்த நடிகை என்ற விருது இவருக்கு சமீபத்தில் கிடைத்தது. தொடர்ந்து பாஜிரோ மஸ்தானி படத்தில் நடித்ததற்காக ஐஐஎப்ஏவின் சிறந்த துணை நடிகை விருதையும் இவர் வென்றார்.
Big #Oscars news! Thirteen more presenters announced! https://t.co/ACwuPaPCPP pic.twitter.com/pUCmgjUhXR
— The Academy (@TheAcademy) February 1, 2016
இந்நிலையில் இவரது மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்துவது போன்று இவருக்கு மற்றொரு அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. வருகின்ற பிப்ரவரி 28 ம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 88வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறுகிறது.
இதில் உலகம் முழுவதுமிருந்து சுமார் 13 நட்சத்திரங்களை இந்த விருதுகளை வழங்க ஆஸ்கர் குழு தேர்ந்தெடுத்துள்ளது. அந்த 13 பேரில் இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
இதனை ஆஸ்கர் விருதுக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்திருக்கின்றனர். இந்த விழாவில் அவர் ஸ்டீவ் கார்வேல்,ஜே.கே.சிம்மன்ஸ் உள்ளிட்ட 12 நடிக, நடிகையருடன் கலந்து கொள்கிறார்.
இதில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் ஒரே நபர் பிரியங்கா சோப்ரா என்பதால் அனைத்துதரப்பு ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
இதனால் தற்போது இந்தியளவில் #priyankachopra என்னும் ஹெஷ்டேக் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.
Bollywood Actress Priyanka Chopra Now Got the Opportunity for 88th Oscars Presenting Awards. Her Name Comes in the Second Slate of Presenters List.
60 words
இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு இந்த வருடம் நடைபெறப் போகும் 88 வது ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.வருகின்ற பிப்ரவரி 28 ம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 88வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறுகிறது.
இதில் உலகம் முழுவதுமிருந்து சுமார் 13 நட்சத்திரங்களை இந்த விருதுகளை வழங்க ஆஸ்கர் குழு தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த 13 பேரில் இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.