twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசை நிகழ்ச்சியில் பாட வந்த ரூ.20 கோடி வாய்ப்பை ஏற்க மறுத்த பிரியங்கா சோப்ரா

    By Siva
    |

    மும்பை: சர்வதேச இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாட ரூ.20 கோடி தருவதாக தெரிவித்தும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பாட மறுத்துவிட்டார்.

    பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பு தவிர பாடல்களும் பாடி வருகிறார். இன் மை சிட்டி, எக்சாட்டிக், ஐ கான்ட் மேக் யூ லவ் மீ என அவர் பாடி வெளியிட்ட அனைத்துமே ஹிட்டாகியுள்ளன.

    இதையடுத்து பிரியங்காவுக்கு பாட பாலிவுட்டில் இல்லை சர்வதேச அளவில் இருந்து வாய்ப்புகள் வருகிறது. ஆனால் கைவசம் பல படங்கள் இருப்பதால் அவர் பாட வரும் வாய்ப்புகளை ஏற்க மறுத்து வருகிறார்.

    இந்நிலையில் சர்வதேச இசை நிகழ்ச்சியில் பாடுமாறு பிரியங்காவை கேட்டுள்ளனர். அவ்வாறு அவர் பாட ரூ.20 கோடி தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடிக்கும் முன்பு தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட விரும்புகிறார் பிரியங்கா. அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டு நிகழ்ச்சியில் பாட விரும்பவில்லை.

    பிரியங்கா தனது குடும்பத்தார் மீது மிகுந்த பாசம் உள்ளவர் என்பதால் அவர் ரூ.20 கோடி வாய்ப்பை ஏற்க மறுத்ததில் ஆச்சரியம் இல்லை.

    English summary
    Bollywood actress Priyanka Chopra has refused to accept Rs. 20 crore offer to perform at an international live concert.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X