Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அந்த சீனை தூக்கினால்தான் விழாவுக்கு வருவேன் - அடம் பிடிக்கும் ரேஷ்மி மேனன்!
ரேஷ்மி மேனன்.... கோடம்பாக்கத்தில் இப்போது பரபரப்பு நாயகி இவர்தான். பாபி சிம்ஹாவின் வருங்கால மனைவியான இவர், இப்போது ஒரு படத்துக்கு வில்லங்கமாக நிற்கிறார்.
அந்தப் படம் கிருமி. காக்கா முட்டை புகழ் மணிகண்டன் கதை திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்தில் கதிர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து, நாளை மறுநாள் இசை வெளியீடும் நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில் படக்குழுவுக்கு எந்த ஒத்துழைப்பும் தர முடியாது என முரண்டு பிடிக்கிறாராம் ரேஷ்மி.
என்னதான் பிரச்சினை?
இந்தப் படம் ஆரம்பிக்கும்போது ரேஷ்மிக்கும் பாபி சிம்ஹாவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கிருமி படத்தில் கதிருக்கும் ரேஷ்மிக்கும் ரொம்ப நெருக்கமான காதல் காட்சிகள் சில வைத்திருக்கிறார்கள். ரேஷ்மியும் எந்த மறுப்பும் சொல்லாமல் முழுமையாக ஒத்துழைத்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.
நாளை மறுநாள் படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொள்ளுமாறு தயாரிப்பாளர் தரப்பில் அழைத்திருக்கிறார்கள். ஆனால் சென்னையிலேயே இருந்தும்கூட, விழாவுக்கு வர முடியாது என்று கூறிவிட்டாராம்.
ஏன்?
நீங்கள் ஷூட் பண்ண அந்த நெருக்கமான காட்சிகளை முற்றாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆடியோ வெளியீடு மட்டுமல்ல, படம் தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
ஆனால் இயக்குநரைக் கேட்டால், அந்தக் காட்சிகள் கதைக்கு மிகவும் தேவை. இல்லாவிட்டால் படம் அழுத்தமாக இருக்காது. எனவே நீக்க முடியாது என்று கறாராகக் கூற, தயாரபிப்புத் தரப்பு மீண்டும் ரேஷ்மியிடம் போயிருக்கிறது.
ஆனால் ரேஷ்மியோ, என் முடிவில் மாற்றமில்லை என்று கூறிவிட, பப்ளிசிட்டிக்கான வாய்ப்பு குறைவாக உள்ளதே என கையைப் பிசைகிறது தயாரிப்புத் தரப்பு.
"இதுதான் காட்சி என விளக்கி, அதற்கு ரேஷ்மியும் ஒப்புக் கொண்டதால்தான் எடுத்தோம். இந்த மறுப்பை அப்போதே சொல்லியிருக்கலாம். ஆனால் படம் ரிலீசுக்குத் தயாராக உள்ளது. நல்ல பப்ளிசிட்டி முக்கியம். அதற்கு ஹீரோயின் வேண்டும். ஆனால் அவரோ இப்போது திடீரென இப்படி வில்லங்கம் செய்கிறார்..." என்கிறார் தயாரிப்பாளர்.