twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசை ஆசையாய் வளர்த்த 'குழந்தை'யை சித்தார்த்திடமே விட்டு வந்த சமந்தா

    By Siva
    |

    சென்னை: சமந்தா தான் ஆசையாக வளர்த்த நாயை தனது முன்னாள் காதலர் சித்தார்த்திடமே விட்டு வைத்துள்ளாராம்.

    சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். 2015ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று செய்திகள் வெளியானது. இதற்கிடையே சமந்தா ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்க துவங்கினார்.

    அவரின் கவர்ச்சியாட்டம் சித்தார்த்துக்கு பிடிக்கவில்லை. விளைவு இருவரும் பிரிந்துவிட்டனர்.

    நாகரீகம்

    நாகரீகம்

    காதல் முறிந்தபோதிலும் ஒருவரையொருவர் திட்டி பேட்டி எதுவும் கொடுக்காமல் நாகரீகமாக நடந்து கொண்டனர் சித்தார்த்தும், சமந்தாவும்.

    நல்ல மனிதர்

    நல்ல மனிதர்

    சித்தார்த்தை பிரிந்த பிறகும் கூட அவர் நல்ல மனிதர் என்று சமந்தா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

    நாய்

    நாய்

    தெருவில் ஆதரவில்லாமல் கிடந்த நாயை சமந்தா தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்தார். நோரி என்று பெயரிடப்பட்ட அந்த நாயை தனது குழந்தை என்றே கூறி வந்தார் சமந்தா. அந்த அளவுக்கு அவருக்கு நோரி மீது பாசம் அதிகம்.

    சித்தார்த்

    சித்தார்த்

    சித்தார்த்தை பிரிந்தபோது சமந்தா தனது செல்ல நோரியை அவரிடமே விட்டுவிட்டாராம்.

    மவுக்லி

    மவுக்லி

    சித்தார்த் மவுக்லி என்ற நாயை வளர்த்து வருகிறார். மவுக்லி மற்றும் நோரியை அக்கறையுடன் பார்த்து வருவதாக சித்தார்த் அண்மையில் தெரிவித்திருந்தார். பிரிவு பற்றி எதுவும் அறியாத நோரியும், மவுக்லியும் ஜாலியாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

    English summary
    Samantha is said to have left her most important one with her former lover Siddharth as her memory. Yes ! its none other than her baby, Nori. Nori is Samantha's favourite pet and she often refers to it as her baby.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X