Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகை சாவித்திரி கதை கேட்டு அழுத திரிஷா
மறைந்த பழைய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை கேட்டு திரிஷா கண்கலங்கினார்.
பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்க திரிஷா வந்து இருந்தார்.
சில காட்சிகளில் நடித்த அவர், ஓய்வு எடுப்பதற்காக சிறிது நேரம் ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது, தெலுங்கு பட உலகை சேர்ந்த மூத்த நடிகர் ஒருவர் சாவித்திரியின் வாழ்க்கை கதையைப் பற்றி பேச துவங்கினார்.
சாவித்திரியின் கதை
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து லட்சம், லட்சமாக சம்பாதித்த சாவித்திரி சொத்துக்களை வாங்கி குவித்தார். ஆனால், கடைசியில் சாவித்திரிக்கு எதுவும் நிலைக்கவில்லை.
மதுப்பழக்கம்
மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால் எல்லாம் போய்விட்டது. பட வாய்ப்புகளை இழந்தார். சம்பாதித்த சொத்துக்களை இழந்தார். நோய்வாய் பட்டார்.
கோமா நிலையில்
பல மாதங்கள் கோமா நிலையிலேயே படுக்கையில் இருந்து உயிரை விட்டார் என்று உருக்கமாக அவரது சாதனையை சொல்லிக் கொண்டிருந்தார்.
கண்ணீர் விட்ட திரிஷா
இதை கேட்டதும் திரிஷாவுக்கு கண்களில் நீர் கசிந்தது. தன்னுடைய கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
துயரம் நிறைந்த கதை
இன்றைய இளம் கதாநாயகிகள் பலருக்கு சாவித்திரி ரோல் மாடலாக இருக்கிறார். அவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா? என்று சொல்லி திரிஷா வருத்தப்பட்டாராம்.