Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செரீன் மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் 'திகில்'
பெரிய நடிகையாக வலம் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு திடீரென காணாமல் போய் மீண்டும் வந்திருக்கும் செரீன் நடிக்கும் புதிய படம் திகில்.
அசோக் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.
கல்கி ஸ்ருதி, ரவிகாளே, விஜய் ஆனந்த், ஜெயஸ்ரீ ராஜ், அரவிந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
பாடல்களை அண்ணாமலை எழுத, ஆஸ்லி மண்டோனிகா இசையமைக்கிறார்.
எழுதி இயக்கி இருப்பவர் - சந்தோஷ் கொடன்கேரி.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, "இந்த படம் ஒரு இரவில் நடக்கும் ஹாரர் திரில்லர் படம். தொலைக்காட்சி
ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும் செரீனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. திடீரென்று சில நாட்கள் அவருக்கு விடுமுறை கிடைக்க எட்டு மாதம் கழித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டவரைப் பார்க்க அவரிடம் சொல்லாமல் செல்ல முடிவு செய்கிறார்.
சென்னையில் இருந்து கர்நாடகாவில் உள்ள கூர்க் என்ற இடத்தை வந்தடைகிறார். கூர்க் மலைப் பிரதேசம் என்பதால் இரவுப் பயணத்தைத் தவிர்பதற்காக வாடகை வீடு ஒன்றில் தங்குகிறார். அங்கு அவருக்கு எல்லா வசதிகளும் கிடைகின்றன.
அந்த வீட்டில் ஒரு இடத்தில் துப்பாக்கி மற்றும் பழைய கத்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். விடிவதற்கு முன்பு அவர் சந்திக்கும் திகில் அனுபவங்கள்தான் படத்தின் திரைக்கதை. இந்தஅ படத்திற்காக ஒரே இடத்தில் இருபது நாட்கள் இரவு மட்டுமே படப்பிடிப்பை நடத்தினோம். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. விரைவில் அனைவருக்கும் ஒரு திகில் அனுபவம் காத்திருக்கிறது," என்றார்.