Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ வீட்டில் இருந்து தந்தையால் இழுத்து வரப்பட்டேனா?: வாரிசு நடிகை விளக்கம்
மும்பை: பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரின் வீட்டில் இருந்து சக்தி கபூர் தன்னை இழுத்து வந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என நடிகை ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது மனைவியை பிரிய நடிகை ஷ்ரத்தா கபூருடனான தொடர்பே காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஃபர்ஹானுடன் லிவ் இன் முறைப்படி வாழச் சென்ற ஷ்ரத்தாவை அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூர் வீடு புகுந்து இழுத்து வந்ததாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து ஷ்ரத்தா கூறியிருப்பதாவது,
செய்தி
ஃபர்ஹானின் வீட்டில் இருந்து என் தந்தை என்னை இழுத்து வந்ததாக வெளியான செய்தி குறித்து எனக்கு தெரிய வந்தது. அந்த செய்தி உண்மை இல்லை என்பதால் அதை நான் கண்டுகொள்ளவில்லை.
ஆதித்யா
முன்னதாக நானும், ஆதித்யா ராய் கபூரும் காதலிப்பதாக கூறினார்கள். தற்போது ஃபர்ஹான். நாங்களும் மனிதர்கள் தான் என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள்.
குடும்பம்
என்னை பற்றி எது பேசினாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால் என் குடும்பத்தாரை இதில் தொடர்புபடுத்தி பேசினால் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
பெற்றோர்
என் பெற்றோரின் வீட்டில் வசிக்கிறேன். அந்த வீட்டில் தான் நான் பிறந்து, வளர்ந்தேன். எனக்கு என்று தனியாக வீடு இருந்தாலும் நான் அங்கு வசிப்பது இல்லை. நான் திருமணம் ஆனாலும் மாப்பிள்ளையை பெற்றோர் வீட்டிற்கே அழைத்து வருவேன் என்று குடும்பத்தார் ஜோக் அடிப்பார்கள்.