Don't Miss!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Finance மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - வைப்புநிதி திட்டம்: எதில் அதிக வரி சலுகை பெற முடியும்?
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஸ்ருதி ஒன்னும் சங்கமித்ராவில் இருந்து தானா விலகவில்லை: தயாரிப்பு தரப்பு புது குண்டு
சென்னை: சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாஸன் ஒன்னும் தானாக வெளியேறவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கும் வரலாற்று சிறப்புமிக்க படம் சங்கமித்ரா. இந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து வெளியேறினார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா சார்பில் கலந்து கொண்ட பிறகு படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதி.
ஸ்ருதி ஹாஸன்
கதையை முழுமையாக தெரிவிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேறுவதாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்தார். ஆனால் தயாரிப்பு தரப்பில் தற்போது வேறு விதமாக கூறுகிறார்கள்.
சங்கமித்ரா
ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸின் சிஇஓ ஹேமா ருக்மினி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்ருதி ஹாஸன் ஒன்னும் சங்கமித்ரா படத்தில் இருந்து தானாக விலகவில்லை என்று தெரிவித்தார். அதாவது அவர் விலகவில்லை, வெளியேற்றப்பட்டார் என்கிறார்.
விளக்கம்
சங்கமித்ராவில் இருந்து நான் தான் விலகிவிட்டேன் என்றார் ஸ்ருதி. தற்போது தயாரிப்பு தரப்பில் வெளியேற்றிவிட்டோம் என்கிறார்கள். இதை ஸ்ருதி தான் விளக்க வேண்டும்.
நடிகை
ஸ்ருதிக்கு பதில் நல்ல நடிகையை சங்கமித்ராவாக தேர்வு செய்துவிட்டார்களாம். அது யார் என்பதை சரியான நேரத்தில் அறிவிப்பார்கள். அதுவரை பொறுத்திருப்போம்.