Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வேலைக்காரனுக்காக உடல் எடையை 10 கிலோ குறைக்கும் சினேகா
சென்னை: சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்காக சினேகா தனது எடையை 10 கிலோ வரை குறைக்கிறாராம்.
குழந்தை பெற்ற பிறகு நடிக்க வந்த சினேகா முதலில் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கூறினார். பின்னர் ஹீரோயின் ஆசையை விட்டுவிட்டு நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
மோகன் ராஜா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் வேலைக்காரன் படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சினேகா
படத்தில் சினேகா கதாபாத்திரம் ஒல்லியாக இருக்க வேண்டுமாம். பிரசவத்திற்கு பிறகு சினேகா வெயிட் போட்டுவிட்டார். இந்நிலையில் படத்திற்காக வெயிட்டை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
உடல் எடை
படத்திற்காக நான் எடையை 10 கிலோ வரை குறைக்க வேண்டும். ஏற்கனவே 7 கிலோ குறைத்துவிட்டேன். மீதமுள்ளதை குறைக்க முயற்சி செய்து வருகிறேன் என்கிறார் சினேகா.
கதாபாத்திரம்
நான் கர்ப்பமானபோது போட்ட வெயிட்டை குறைப்பது என்று இல்லை. என் கதாபாத்திரம் ஒல்லியாக இருக்கும் என்று இயக்குனர் கூறினார். கதாபாத்திரத்தின் உடல் எடை மிகவும் முக்கியம் என்றார் அவர் என சினேகா தெரிவித்துள்ளார்.
ஒர்க்அவுட்
நான் காலையில் கார்டியோ, மாலையில் வெயிட் ட்ரெய்னிங் செய்து வருகிறேன். என் மகன் இருப்பதால் வீட்டிலேயே ஒர்க்அவுட் செய்கிறேன். சிவகார்த்திகேயன் படத்தில் பஹத் பாசிலுடன் நடிப்பதில் மகிழ்ச்சி. நான் அவரின் ரசிகை என சினேகா கூறியுள்ளார்.