Don't Miss!
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- News "ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மன உளைச்சல்... தற்காலிகமாக சினிமாவிலிருந்து விலகல்! - சோனா அறிவிப்பு
மங்காத்தா மது விருந்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக போலீசுக்கு போனார். இவ்வழக்கு நீதிமன்றத்துக்கும் போனது. போலீசார் கைது செய்யாமல் இருக்க எஸ்.பி.பி. சரண் முன் ஜாமீன் பெற்றார்.
பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரத்தை சோனா போலீசில் அளித்ததால் வழக்கு சூடு பிடித்தது.
மது விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி போன்றோரிடம் போலீசார் விசாரணையை துவங்கினர். இதனால் சோனா, சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒருகட்டத்தில், போலீசார் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் சோனாவை சமரசமாக போகும்படி நிர்ப்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் எஸ்பிபி சரணுக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தினால் கைது செய்து உள்ளே அடைத்துவிடுவோம் என போலீஸ் சோனாவை பகிரங்கமாக மிரட்டியது.
இதனால், அடுத்த நாளே சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தார் என்றும், இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சோனாவே அறிவித்தார். எஸ்ப்பி சரண் எதுவும் கூறவில்லை.
நடந்த சம்பவங்கள் தன் மனதை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறிவந்தார் சோனா. உடனடியாக வெளிநாடு போய், பின்னர் ஹைதராபாத்தில் தங்கி நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது இப்போதைய முடிவு குறித்து சோனா கூறுகையில், "எனக்கு வந்தது போல் எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். மானபங்கம் செய்தார்கள். இதை எதிர்த்து தனி ஆளா நின்னு போராடினேன். என்பக்கம் உண்மையிருப்பதை அறிந்து பெண்கள் அமைப்புகள் ஆதரவுகரம் நீட்டின. இடையில் பல விஷயங்கள் நடந்தன. ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டது. வழக்கை வாபஸ் பெறுகிறேன். வக்கீலை வைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். ஓரிரு நாளில் அது முடிந்து விடும்.
அதன் பிறகு வெளிநாடு போகப் போகிறேன். மன உளைச்சலில் இருந்து விடுபட அமைதியும், ஓய்வும் தேவை. அதற்காகத்தான் வெளிநாடு செல்கிறேன். ஒரு வருடம் தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகி இருக்கப் போகிறேன்.
வேண்டாம் வெங்கட்பிரபு படம்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுப்பட மொன்றை தயாரிக்க முடிவு செய்து இருந்தேன். இதற்காக அவரிடம் ஒப்பந்தமும் போட்டு இருந்தேன். அந்த படத்தை இனி தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.
வெங்கட் பிரபுவும் நானும் சுமூகமாக பேசி விலகிவிட்டோம். இதனால் கொஞ்ச நாட்கள் தூக்கமே வராமல் தவித்தேன். மாத்திரை போட்டுத்தான் தூங்கினேன். உடல் நிலை வேறு பாதித்துவிட்டது. சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருக்கப் போகிறேன், என்றார்.
-
அய்யய்யோ மீண்டும் மீண்டுமா?.. ரஜினி மகளின் ஃபார்முலாவை கையில் எடுக்கும் விஜய் மகன்?
-
சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி