Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கால் நூற்றாண்டைக் கடந்து... தமிழில் குரல் கொடுத்த ஸ்ரீதேவி
சென்னை: கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் தன் சொந்தக்குரலில் புலி படத்திற்காக தமிழில் (டப்பிங்) பேசியிருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுருதிஹாசன் ஹன்சிகா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் புலி திரைப்படம் வரும் காந்தி ஜெயந்தியன்று வெளியாக இருக்கிறது.
புலி வாயிலாக 20 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரீதேவி மீண்டும் நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். இன்னொரு சுவாரசிய தகவலாக புலி படத்தில் ஸ்ரீதேவியே சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.
இருபத்தைந்து வருடங்கள் கழித்து தமிழில் டப்பிங் பேசியது மகிழ்ச்சியாக இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமின்றி இந்தி , தெலுங்கு மொழிகளிலும் புலி படம் நேரடிப்படமாக வெளியாக இருக்கிறது.
தமிழ் தவிர ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஸ்ரீதேவியே டப்பிங் பேசியுள்ளார். இதற்காக சென்னையிலேயே தங்கி இருந்து டப்பிங் வேலைகளை முடித்துள்ளாராம்.
எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் விஜய் படம் இந்தியில் வெளியாக இருப்பது இதுதான் முதல் முறையாம். எனவே மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் புலிக் (பட)குழுவினர்.
ஆக "புலி"யின் மூலமாக "மயிலு" வின் சொந்தக்குரலை மீண்டும் கேட்கலாம்.