twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கால் நூற்றாண்டைக் கடந்து... தமிழில் குரல் கொடுத்த ஸ்ரீதேவி

    By Manjula
    |

    சென்னை: கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் தன் சொந்தக்குரலில் புலி படத்திற்காக தமிழில் (டப்பிங்) பேசியிருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.

    இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுருதிஹாசன் ஹன்சிகா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் புலி திரைப்படம் வரும் காந்தி ஜெயந்தியன்று வெளியாக இருக்கிறது.

    Sridevi to Dub Her Voice for Puli’s Tamil Version

    புலி வாயிலாக 20 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஸ்ரீதேவி மீண்டும் நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். இன்னொரு சுவாரசிய தகவலாக புலி படத்தில் ஸ்ரீதேவியே சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.

    இருபத்தைந்து வருடங்கள் கழித்து தமிழில் டப்பிங் பேசியது மகிழ்ச்சியாக இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமின்றி இந்தி , தெலுங்கு மொழிகளிலும் புலி படம் நேரடிப்படமாக வெளியாக இருக்கிறது.

    தமிழ் தவிர ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஸ்ரீதேவியே டப்பிங் பேசியுள்ளார். இதற்காக சென்னையிலேயே தங்கி இருந்து டப்பிங் வேலைகளை முடித்துள்ளாராம்.

    எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் விஜய் படம் இந்தியில் வெளியாக இருப்பது இதுதான் முதல் முறையாம். எனவே மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் புலிக் (பட)குழுவினர்.

    ஆக "புலி"யின் மூலமாக "மயிலு" வின் சொந்தக்குரலை மீண்டும் கேட்கலாம்.

    English summary
    Sridevi will be seen playing the role of a queen in her upcoming movie ‘Puli’. After 25 Years She will dub her voice for the Tamil version of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X