Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பாகுபலி பத்தி இப்ப என்ன பேச்சு.. புலியைப் பத்தி மட்டும் கேளுங்க.. எரிச்சல் காட்டிய ஸ்ரீதேவி
ஹைதராபாத்: பாகுபலி படம் வந்து ரொம்ப நாட்களாகி விட்டது. தியேட்டரிலிருந்தும் போய் விட்டது. இப்போது அதைப் பற்றி பேச என்ன உள்ளது. புலியைப் பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீதேவி.
புலி படம் தொடர்பாக தீவிர புரமோஷனில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீதேவி. தனது சமூக வலைதளப் பக்கங்களை புலி குறித்த செய்திகளைப் போட்டு அசத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான் பாகுபலி குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது எரிச்சல் காட்டியுள்ளார் ஸ்ரீதேவி. இதற்குக் காரணம் உள்ளது.
ரம்யா கிருஷ்ணன் வேடத்தில்
பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டரில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியைத்தான் அணுகினார் ராஜமெளலி. ஆனால் ரூ. 6 கோடி சம்பளம் தர வேண்டும் என்று ஸ்ரீதேவி கேட்டதால் அந்த வாய்ப்பு ரம்யாவுக்குப் போய் விட்டது.
பலி போனால் என்ன புலி இருக்கே
இந்த நிலையில்தான் அவரைத் தேடி புலி பட வாய்ப்பு வந்தது. பாகுபலியில் தன்னை நிராகரித்த ராஜமெளலிக்கு சரியான பதிலடியை புலிமூலம் கொடுக்க திட்டமிட்ட ஸ்ரீதேவி இப்படத்தில் ஆர்வத்துடன் நடித்தார். இப்போது புரமோஷனிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அதான் போயிருச்சே பிறகென்ன
பாகுபலியில் நடிக்காமல் போனது குறித்து வருத்தப்படுகிறீர்களா என்று செய்தியாளர்கள் ஸ்ரீதேவியிடம் கேட்டதற்கு, அப்படம் வந்தது, ஓடியது. இப்போது தியேட்டைரை விட்டும் போய் விட்டது. அது பற்றிப் பேசுவது தேவையற்றது. புலி பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள் என்றார் ஸ்ரீதேவி.
புதுப் புதுப் கதைகளில் ஆர்வம்
மேலும் அவர் கூறுகையில், புதுப் புதுக் கதைகளைக் கேட்டு வருகிறேன். புலி படத்தில் எனக்கு அருமையான கேரக்டர். ரசித்து நடித்தேன். ராணியாக வருகிறேன்.
அசத்தல் ராணி
அந்த ராணி கேரக்டர் அருமையானது. அபாரமானது. அதை ஏன் நழுவ விட வேண்டும் என்று எண்ணியே நடிக்க ஒப்புக் கொண்டேன். இதை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர்களது தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார் ஸ்ரீதேவி.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!