Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை செலினா ஜேட்லியின் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சன்னி லியோன்
மும்பை: நடிகை சன்னி லியோன் தனது வீட்டை சேதப்படுத்தியதால் பாலிவுட் நடிகை செலினா ஜேட்லி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் பாலிவுட்டில் நடித்து எனக்கும் நடிக்கத் தெரியும் என்பதை நிரூபித்தே தீருவேன் என்ற முடிவில் மும்பையில் தங்கியுள்ளார். அவருக்கு தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனால் அவரைத் தேடி மிக கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே வருகின்றன.
இந்நிலையில் தான் சன்னி லியோனுக்கு வீட்டு பிரச்சனை எழுந்துள்ளது.
செலினா
சன்னி லியோன் ஒரு ஆபாச பட நடிகை என்பதால் அவருக்கு மும்பையில் வீடு வாடகைக்கு கொடுக்க மக்கள் தயங்கியுள்ளனர். இதை பார்த்து சன்னி மீது பரிதாபப்பட்ட பாலிவுட் நடிகை செலினா ஜேட்லி தனது வீட்டை அவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
சன்னி
2 ஆண்டு ஒப்பந்தம் கடந்த நவம்பர் மாதம் நிறைவடைந்தும் சன்னியும், அவரது கணவர் டேனியல் வெப்பரும் வீட்டை காலி செய்யவில்லை. மாறாக வீட்டில் சிசிடிவி கேமராக்கள் வைக்க சுவரில் துளை போட்டு, செலினாவின் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தியும் உள்ளனர்.
ஓடிப் போ
வீட்டை காலி செய்ய மறுத்த சன்னி லியோனை உடனே அங்கிருந்து வெளியேற்றியுள்ளார் செலினா என்று செய்திகள் வெளியாகின. இதையடுத்து ஹோட்டல் ஒன்றில் தங்கிய சன்னி தற்போது ஜுஹு பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மறுப்பு
குப்பை செய்தி பற்றி எல்லாம் கருத்து தெரிவிக்க முடியாது. நாங்கள் கடந்த ஓராண்டு காலமாக ஜுஹுவில் உள்ள ஃபிளாட்டில் வசிக்கிறோம். லீசு முடிந்தவுடன் நாங்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம் என்று சன்னி தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
ஆபாச பட நடிகையான சன்னி லியோனை நாடு கடத்த வேண்டும் என்றும், அவரை மீண்டும் இந்தியாவுக்குள் நுழையவிடக் கூடாது என்றும் கூறி இந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்து அமைப்பு போலீசில் புகார் அளித்தது. அந்த அமைப்பின் புகாரின்பேரில் சன்னி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.